இராணுவத்தினர் அச்சமின்றி வாழலாம்- புதிய பாதுகாப்புச் செயலாளர்

1161 0

நாட்டிலுள்ள இராணுவத்தினருக்கு அச்சமின்றி வாழ முடியும் என பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன தெரிவித்துள்ளார்.

புதிய பாதுகாப்புச் செயலாளராக பதவியேற்ற பின்னர் இன்று (15) தலதா மாளிகைக்கு வருகை தந்து வழிபாடுகளில் ஈடுபட்டு, மகாநாயக்கர்களின் ஆசீர்வாதத்தை பெற்றதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

பலவந்தமாக கடத்தப்பட்டுக் காணாமல் போனவர்கள் தொடர்பான சட்ட மூலம் தொடர்பில் இராணுவத்தினர் அச்சுறுத்தலில் தள்ளப்படுகின்றார்கள் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

Leave a comment