ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் தனது மூன்று நாள் பங்களாதேஷ் விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை 3.40 மணிக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் 22 பேர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பங்களாதேஷின் டாக்காநகரில் இருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல். 190 ஆம் இலக்க விமானத்தில் இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.