சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட 21 பேர் கைது

384 0

சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட உள்நாட்டு 21 பேர் இருவேறு பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிலாவெளி, பர்வி தீவுக்கு அருகிலுள்ள பரப்பில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட 15 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், அவர்கள் பயன்படுத்திய 2 டிங்கி படகுகளும், 220 மீற்றர் நீளமான தடைசெய்யப்பட்ட 2 வலைகளுடன், 319 கிலோ மீன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, திருகோணமலை கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட வலையைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், அவர்கள் பயன்படுத்திய டிங்கி படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Leave a comment