நெடுந்தீவு குதிரைகளைப் பாதுகாக்க குழு நியமிப்பு

290 0

நெடுந்தீவு குதிரைகளைப் பாதுகாக்கும் வழிமுறைகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குழுவொன்றை நியமித்துள்ளார்.

வடமாகாண முன்னாள் சுற்றாடல்துறை அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமான பொன்னுத்துறை ஐங்கரநேசன் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாகக் குதிரைகள் உயிரிழந்து வருவதாக அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்திகளை அடுத்தே முதலமைச்சரால் இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்த குழுவினால் தயாரிக்கப்படும் அறிக்கை 2 வார காலப்பகுதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்படவேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

நெடுந்தீவில் வாழும் குறித்த குதிரைகள் போத்துக்கேய ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட குதிரைகளின் வழித்தோன்றல்கள் என தனிச்சிறப்பில் அடையாளப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment