தற்போதைய மாகாண சபை அதிகாரங்கள் பெயரளவிலேயே இருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைகளின் புதிய அதிகாரப் பகிர்வு தொடர்பில் நீர்கொழும்பில் இடம்பெற்ற மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
தற்போதைய மாகாண சபை முறைமையில் மக்கள் பிரதிநிதிகளால் காத்திரமான விடயங்களைச் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.
கடந்த வாரம் கிழக்கு மாகாணத்தில் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
அதில் வயதெல்லை குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அவசரமாக சம்பந்தப்பட்வர்களை தொடர்பு கொண்டபோது அது மத்திய அரசின் நடவடிக்கை என்று பதில் கிடைத்தது.
வடக்கு கிழக்கில் யுத்தம் மற்றும் இடம்பெயர்வுகள் காரணமாக கல்வியைப் பின்போட்ட மாணவர்களின் பட்டப்படிப்பு தாமதமாகியதன் காரணமாக வயதெல்லைகள் கூடிய பட்டதாரிகள் அதிகமாக உள்ளனர்.
இந்த நிலையில் பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பம் கோரலில் உடனடியாக வயதெல்லையை மாற்றப்படவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் குறிப்பிட்டார்.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025 -
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
கைபேசிச் சாட்சி!
April 6, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
35ஆவது அகைவை நிறைவில் தமிழாலயங்கள்
March 5, 2025 -
அன்னை பூபதி அவர்களின் நினைவுக் கவிதைப் போட்டி 2025
February 24, 2025 -
அன்னை பூபதி நினைவாக உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள்- நெதர்லாந்து
February 7, 2025