இன்று நாடாளாவிய ரீதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

272 0
நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று இடம்பெற உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அனைத்து ஊடகங்களுடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த 6 மாதங்களில், டெங்கு நோய் காரணமாக 269 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், 89 ஆயிரம் பேர் டெங்கு நோய்த் தாக்கத்துக்கு உள்ளதாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

Leave a comment