கேரள கஞ்சாவுடன் பெண் உள்ளிட்ட 3 பேர் கைது

236 0

கொழும்பு – ஹெவ்லொக் பிரதேசத்தில் 6 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் பெண் உள்ளிட்ட 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து முன்னெடுத்த விசேட நடவடிக்கையின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டியில் கொண்டுச் செல்லப்பட்டபோது இந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா என்பன மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக நாரஹேன்பிட்டிய காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Leave a comment