கொழும்பில் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை

278 0

அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக கொட்டாஞ்சேனை, மட்டக்குளி, கிராண்பாஸ் மற்றும் தொட்டலங்க பிரதேசங்களில் இன்று 12 மணி நேரம், நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று பிற்பகல் 2.00 மணியில் இருந்து நாளை அதிகாலை 2.00 மணி வரை இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

இதேவேளை, கொட்டாஞ்சேனை – அளுத்மாவத்தையில் நீர் குழாய் வெடித்தன் காரணமாக ஏற்பட்ட நீர் கசிவை வழமைக்கு கொண்டுவருதற்கான நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்றுவருவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

Leave a comment