நெவில் பெர்ணாந்தோ வைத்தியசாலையை திங்கட்கிழமை அரசு கையகப்படுத்தும்

285 0

மாலபே நெவில் பெர்ணாந்தோ வைத்தியசாலையை வரும் திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் அரசாங்கத்திற்கு கையகப்படுத்திக் கொள்வதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார். 

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

நெவில் பெர்ணாந்தோ வைத்தியசாலையை சுகாதார அமைச்சின் கீழ் இணைத்துக் கொண்டு அதனை போதனா வைத்தியசாலையாக மாற்றுவதற்கும், நிர்வாகத்திற்காக நிர்வாகக் குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்பட உள்ளதுடன், கட்டணம் அறவிடும் வார்டுகளும் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

அதேவேளை மருத்துவ சபையின் வெற்றிடமாகவுள்ள தலைவர் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment