தம்மாலோக்க தேரரின் வழக்கு விசாரணைக்கான திகதி தீர்மானம்

256 0

அனுமதி பத்திரமின்றி யானை குட்டியொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டுக்கு அமைய சட்டமா அதிபரால் உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன முன் விசாரணைக்கு எடுத்துக் கெண்ட போதே இது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a comment