மோடி – சந்திரபாபு நாயுடு சந்தித்து பேச்சு

340 0

Tamil_News_large_1579297_318_219இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புதுடில்லியில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இதன்போது ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து சில பகுதிகளைப் பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது.
இவ்வாறு மாநிலத்தைப் பிரிக்கும்போது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும், தெலுங்கு தேசம் கட்சியும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.