பழமையான விகாரைகளை பாதுகாக்க 400 மில்லியன்

210 0

பழமையான விகாரைகளை பாதுகாக்க 400 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள தொன்மை வாய்ந்த மத தளங்களின் பழமையான அடையாளங்களை பாதுகாப்பாக பேணுவதற்கு சர்வதேச நிபுணர்கள் அழைத்துவரப்படவுள்ளனர்.

அத்துடன், பின்தங்கிய பழமையான விகாரைகளின் அபிவிருத்திக்காக நூறு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment