சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 10 பேர் கைது

262 0

தெதுரு ஓயாவில் சட்டவிரோதமாக  மணல் அகழ்வில் ஈடுபட்ட 10 பேரை காவற்துறை கைது செய்துள்ளது.

தெதுரு ஓயா – வெல்லவ பிரதேசத்தில் குறித்த நபர்கள் நேற்றைய தினம் மணலை அகழ்ந்து கொண்டு சென்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள இரண்டு பாரவூர்திகள் மற்றும் உபகரணங்களும் காவற்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் வெல்லவ பிரதேசத்தை சேர்ந்தவர்களுடன், அவர்கள் இன்று குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Leave a comment