இருதய நோயாளர்களுக்கு வழங்கப்படும் தற்காலிக குழாயின் விலையை குறைக்க நடவடிக்கை

253 0
இருதய நோயாளர்களுக்கு வழங்கப்படும் தற்காலிக குழாயின் விலையை குறைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி இதன் விலை 2 லட்சம் ரூபாவாக குறைக்கப்படவுள்ளதுடன், இருதய நோயாளர்களுக்கான மருந்துகளையும் 50 ஆயிரம் ரூபாவாக அடுத்த வாரம் குறைக்கப்படவுள்ளது.
அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனை நேற்று நாடாளுமன்றத்தில் வைத்து கூறியுள்ளார்.
இதற்கான வர்த்தமான அறிக்கை அடுத்தவாரம் வெளியாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment