தொடரூந்தில் மோதி இளைஞன் பலி

248 0

மின்னேரிய தொடரூந்து நிலையத்துக்கு அருகில் தொடரூந்தில் மோதி, இளைஞன் பலியாகியுள்ளார்.

மின்னேரிய, மஹரத்மலே பிரதேசத்தைச் சேர்ந்த 18வயது இளைஞனே, இவ்வாறு இன்று உயிரிழந்துள்ளார்.

146 தொடரூந்து மைல்கல் பிரதேசத்தில் தொடரூந்தில் மோதிய இளைஞன், அருகிலுள்ள கறுப்பு பாலம் வரை இழுத்துச் செல்லப்பட்டு பாலத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த இளைஞன் அதிகமாக மதுபானம் அருந்தும் ஒருவர் என தகவல் வெளியாகியுள்ளது.

அவர்,நேற்று இரவு மதுபானம் அருந்தியிருந்துள்ளதுடன், தொடரூந்து வீதியில் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து குறித்து தொடரூந்தின் சாரதியிடம் கேட்டபோது, குறித்த நபர் இரண்டு பெண்களுடன் தொடரூந்து பாதைக்கு அருகில் நின்று கதைத்துக்கொண்டிருந்ததாக தெரிவித்தார்.

அத்துடன், திடீரென தொடரூந்துக்கு முன்னால் அந்த நபர் பாய்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment