நாட்டின் பல பாகங்களில் இன்று மழை பெய்யும் சாத்தியம்.

251 0

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மற்றும் கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் வானிலையில் சற்று மாற்றம் ஏற்பட கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்நிலையில்,  மேல், சபரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,  கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் முல்லைதீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் பல பிரதேசங்களில் மாலை 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே,  தென் மாகாணம் மற்றும் பதுளை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீச கூடும் என அத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பொழியும் போது கடுமையான காற்று வீச கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், மின்னல் தாக்குதல் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment