அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 8பேர் கைது

232 0

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 8பேர், இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் பயன்படுத்திய் றோலர் படகுகள் இரண்டையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை மேலதிக நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை, நாகை மாவட்டத்தின் கோடியக்கரை அருகே இன்று மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மீனவர்கள் அவர்களைத் துரத்தியடித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால், தமிழக மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரைக்குத் திரும்பியுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment