திருகோணமலையில் 23 உள்ளுர் மீனவர்கள் கைது

388 0

sri-lanka-navyதிருகோணமலை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட 23 உள்நாட்டு மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டனர்.
இதன்போது இவர்கள் பயன்படுத்திய மூன்று படகுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகள் என்பன கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக கைதுசெய்யப்பட்டவர்கள் திருகோணமலை துறைமுக காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.