தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் இணக்கம்

221 0

தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றிக்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இணங்கியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்ததிப்பின்போதே அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

இந்தச் சட்டமூலத்தை திருத்தங்களுடன் நிறைவேற்ற அவர்கள் இணக்கம் வெளியிட்டனர்.

மேலும், மகளிருக்கு 25 சதவீத பிரதிநிதித்துவத்தை வழங்குவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Leave a comment