பலவந்தமாக காணாமல்போதலிருந்து பாதுகாத்தல் தொடர்பான சட்டமூலத்தை அரசாங்கம் விலக்கிக் கொள்ள வேண்டும் – விமல்

262 0

பலவந்தமாக காணாமல்போதலிருந்து அனைவரையும் பாதுகாத்தல் தொடர்பான சர்வதேச சமவாய சட்டமூலத்தை அரசாங்கம் பிற்போடாமல், அதனை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இதனை வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், காணாமல்போனோர் தொடர்பாக ஆராய நாட்டில் நிறுவப்படும் எந்தவொரு விசாரணை பொறிமுறைக்கும் அழுத்தம் கொடுக்கும் அதிகாரம் சர்வதேச குழுக்களுக்கு ஏற்படும்.

இதனூடாக இலங்கையின் உள்ளக விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகள் தலையீடு செய்யும் நிலைமை ஏற்படும் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

Leave a comment