இலங்கை ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை – புதிய இராணுவ தளபதி தெரிவிப்பு

504 0

இலங்கை இராணுவம் எந்தவொரு போர்க்குற்றங்களிலும் ஈடுபடவில்லை என இராணுவத்தின் புதிய தளபதி ஜனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எந்தவொரு விசாரணைக்கும் முகங்கொடுக்கத் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் 22வது இராணுவத் தளபதியாக பொறுப்புக்களை ஏற்கும் நிகழ்வு இராணுவ தலைமையகத்தில் இன்று இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவம் சட்டத்தை மதிக்கும் இராணுவமாகும்.

தண்டனைகள் சட்டம் மற்றும் இராணுவ சட்டம் என இரண்டுக்கும் இராணுவம் உட்பட்டுள்ளது.

எனவே, தவறுகள் இழைப்பதற்கான வாய்ப்பு இராணுவத்துக்கு குறைவாக உள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment