கப்பல் ஒன்று இரண்டு படகுகளுடன் மோதல்

271 0

தென் கடற்பரப்பில் கப்பல் ஒன்றுடன் இரண்டு மீனவ படகுகள் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு மீனவர்கள் காணாமல்போயுள்ளனர்.

கடந்த 30ஆம் திகதி குடாவெல்ல துறைமுகத்திலிருந்து சென்ற படகும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் சென்ற படகுகளே விபத்துக்குள்ளாகியுள்ளன.

குடாவெல்ல துறைமுகத்திலிருந்து சென்ற படகு விபத்துக்குள்ளானதில் அதிலிருந்து மூன்று பேரும் காணாமல்போயுள்ளனர்.

பின்னர், அவர்களில் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து சென்ற படகு விபத்துக்குள்ளானபோது, அதிலிருந்த 4 மீனவர்களும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த அனர்த்தம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a comment