சொத்து தகராறு – ஒருவர் கொலை

274 0

கலஹா – தெல்தோட்டை – கபடாகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சொத்து தகராறு காரணமாக நேற்றிரவு இந்த கொலை இடம்பெற்றதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் குறித்த பிரதேசத்தைச் சேரந்த 65 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரியவர் கண்டி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a comment