20.5 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு

248 0

பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 20.5 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் – கொழும்பு தபால் தொடரூந்தில் நேற்று இரவு 10.45 மணியளவில் இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

தொடரூந்தில் சந்தேகத்துக்கு இடமான முறையில் இருந்த இரண்டு பெட்டிகளை சோதனையிட்ட போது, அதற்குள் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வட மத்திய கடற்படையினர் மற்றும் வங்காலை காவல்துறையினர் இணைந்து குறித்த கஞ்சா தொகைகை கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா, மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக வங்காலை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave a comment