புதிய வரிச் சட்டமூலத்தினால் உழைக்கும் மக்களுக்கு பிரச்சினை-பந்துல குணவர்தன

268 0

நாடாளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ள புதிய வரிச் சட்டமூலத்தினால் உழைக்கும் மக்களுக்கு பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரி திருத்தத்தினூடாக மக்கள் மீது வரிச்சுமை சுமத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு வருமான வரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்துக்கு அதிகூடிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயத்துக்காக வழங்கப்படும் மானியங்களுக்கும் இந்தச் சட்டத்தினூடாக வரி அறவிடப்படவுள்ளது.

இதனூடாக நாட்டில் தொழில்புரியும் மக்கள் மீது வரிச் சுமை சுமத்தப்படுகிறது.

உள்நாட்டவர்களை ஊக்குவிக்காது, வெளிநாட்டவர்களுக்கு சலுகைகளை வழங்கும் வகையிலான வரிச் சட்டமூலமே கொண்டுவரப்பட்டுள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Leave a comment