வளைகுடா நெருக்கடி: சவூதி இளவரசர் இலங்கையில்

246 0

சவூதி அரேபிய இளவரசர் அல்வலித் பின் தலால் பின் அப்துல் அஸீஸ் அவசர விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

இன்று முற்பகல் 11.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை அவர் வந்தடைந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்த சவூதி இளவரசர் இரு தரப்பு கலந்துரையாடல் ஈடுபட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சவூதி இளவரசருக்கும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் நான்கு மணித்தியாலங்கள் மட்டுமே சவூதி அரேபிய இளவரசர் அல்வலித் பின் தலால் பின் அப்துல் அஸீஸ் தங்கியிருந்தார்.

வளைகுடாவில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் சவூதி இளவரசரின் இலங்கை விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது

Leave a comment