தமக்குரிய பதில் வழங்கப்படும் வரை தமது போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ள, வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று 119 ஆவது நாளாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக வீதியோரத்தில் கூட்டாரம் அமைத்து போராட்டத்திலீடுபட்டுவருகின்றனர்
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த, கைதுசெய்யப்பட்ட மற்றும் யுத்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகள் தொடர்பில் உரிய தீர்வை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்
இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று 119 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது.
அத்துடன் தமது பிள்ளைகளின் பெயர் விபரங்களை வெளியிடவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் தீர்வுகளின்றி போராட்டங்கள் தொடர்கின்றன