மாந்தை கிழக்கு பிரதேச சபை கட்டடம் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் திறந்து வைப்பு

329 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபை கட்டடம் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் அமைச்சர் பதவியினை பொறுப்பேற்ற பின் முதன் நிகழ்வாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.

மாந்தை கிழக்கு பிரதேச சபையின் அலுவலக கட்டட திறப்பு நிகழ்வும் தன்னியக்கமாக்கப்பட்ட நூலக சேவைகள் நிகழ்வும் அங்குரார்ப்பண நிகழ்வும் இன்று காலை மாந்தை கிழக்கு பிரதே சபை செயலாளர் பா.சிவபாலராசா தலைமையில் நடைபெற்றது .

இதில் வடமாகாண மகளீர் விவகார மற்றும் சமூகசேவைகள் புனர்வாழ்வு கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் வடமாகாணசபை உறுப்பினர்களான, து.ரவிகரன், க.சிவனேசன், சிவாஜிலிங்கம் ,வடமாகாண பிரதிஅவைத்தலைவர் வ.கமலேஸ்வரன் மற்றும் முதலமைச்சரின் செயலாளர்  உள்ளுராட்சி செயலாளர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

Leave a comment