அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அரச சேவையாளர்களுக்கு விஷேட கடன்

363 0

வௌ்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட அரச சேவையாளர்களுக்கு விஷேட முற்பணக் கடன் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சு அது தொடர்பான சற்றரிக்கையை வௌியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி நிரந்தர அரச சேவையாளர் ஒருவருக்கு அடிப்படை சம்பளத்தின் ஆறு மடங்கு தொகை வட்டியில்லாக் கடனாக வழங்கப்பட உள்ளது.

இதற்காக சாட்சியாளர்கள் தேவையில்லை என்பதுடன், 36 தவணைகளுக்குள் கடன் தொகை திரும்பச் செலுத்தப்பட வேண்டும்.

தற்காலிக மற்றும் சாதாரண அரச சேவையாளர்களுக்கு மாதச் சம்பளத்தின் மூன்று மடங்கு தொகை, 18 தவணைகளில் செலுத்தி முடிக்கும்படி வட்டியில்லாமல் வழங்கப்பட உள்ளது.

இவர்கள் ஒருவரை பிணையாக முன்னிறுத்த வேண்டும் என்று பொது நிர்வாக அமைச்சு கூறியுள்ளது.

இது சம்பந்தமான மேலதிக தகவல்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

Leave a comment