உலகிலேயே மிக ஆட்சி என்றால் அது தற்காலத்தில் எமது நாட்டிலுள்ள ஆட்சியாகும். சர்வதேச சக்திகளுடன் இணைந்து நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச் செல்லும் கூட்டு ஆட்சியே இன்று நாட்டில் இடம்பெறுவதாக கூட்டு எதிரணியின் ஒருங்கிணைப்பாளர் பிரசன்ன ரணதுங்க எம்.பி. தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடை பகுதியில் இடம்பெற்ற கூட்டு எதிரணியின் இளம் உறுப்பினர்களுடனான சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கம் தமது தவறுகளை மறைத்துக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தைலமாக பயன்படுத்திக்கொள்கிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுடன் ஒப்பீட்டளவில் பார்க்கின்ற போது தற்போதைய அரசாங்கத்திற்கு தாம் ஆரம்பித்த அபிவிருத்தித் திட்டம் என்று மக்களிடத்தில் கூற ஒரு விடயம் எதுவும் இல்லாதிருப்பது வேடிக்கையாகும்.
உலகத்திலேயே மிக மோசமான அரசாங்கம் ஆட்சி செய்கின்றது. அதனுடன் சில குழுக்களும் கூட்டாக சேர்ந்துகொண்டுள்ளன. இவர்கள் நாட்டை அழிக்க கூட்டு சேர்ந்தவர்கள். சர்வதேச சக்திகளுடன் சேர்ந்து நாட்டை அழிக்க முற்படுகின்றார்கள்.
அரசாங்கத்தின் அமைச்சர்கள் மக்களை குருடர்கள் என்று நினைத்து பேசிக்கொண்டிருக்கின்றார்கள். வீதியில் இறங்கினால் இன்று அரசாங்கத்தின் நிலைமை என்னவென்பது தெரியவரும். எங்கும் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன.
அதனால் இன்று டெங்கு நோய் பெருகியுள்ளது. அதனை கட்டுப்படுத்த வழியில்லாத அரசாங்கம்தான் தற்போது கூட்டு எதிரணியை மட்டுப்படுத்த நினைக்கின்றது. அதனால் நாட்டில் இடம்பெறுகின்ற சகல பிரச்சினைகளுக்கும் மஹிந்தவே காரணம் என்கின்றார்கள்.
மஹிந்தவை நிந்தித்தாலும் தற்போதைய அரசாங்கம் அவரின் செயற்றிட்டங்களை திறந்து வைத்து தனக்கு புள்ளியிட்டுக் கொள்கின்றது என்பது சகலருக்கும் தெரி யும். அதேபால் ஜனாதிபதியும் பிரதமரும் ஆட்சிக்கு வரும் முன்னர் மஹிந்தவால் முடியாது. நாட்டை எமக்கு தாருங்கள் என்றார்கள்.
ஆனால் இன்று மஹிந்தவால் முடிந்தது கூட இந்த ஆட்சியாளர்களால் முடியாது என்று மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். இவ்வாறான ஆட்சியாளர்கள் மஹிந்த ராஜபக் ஷவை ஏசுவதற்கான களமான எமது நாடும் முன்னாள் ஜனாதிபதியினாலேயே காப்பாற்றப்பட்டது.
அரசாங்கத்தின் காலம் சரிபாதியாக முடிந்த பின்பும் கூட நாட்டில் ஒரு முன்னேற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார்.