வித்தியா படுகொலை மரபணு அறிக்கை நீதிமன்றில் தாக்கல்

386 0

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான மரபணு அறிக்கை, யாழ். மேல் நீதிமன்ற சிறப்பு அமர்வில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில் நடைபெற்று வரும் குறித்த சாட்சியப் பதிவின் நான்காவது நாளான நேற்றைய தினம், மொறட்டுவ பல்கலைக்கழக கணினி விஞ்ஞான பீடத்தால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மரபணு அறிக்கை உட்பட வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் யாவும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றினால் தாக்கல் செய்யப்பட்டது.

நேற்றைய தின சாட்சியப் பதிவுகள் இரவு 7 மணிவரை ஒத்திவைக்கப்பட்ட அதேவேளை, இன்றைய தினம் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

Leave a comment