போலி நாணயத் தாள்களுடன் மூவர் கைது

251 0

மாரவில – நாத்தாண்டிய பகுதியில் போலி நாணயத் தாள்களுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

மாரவில பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது, ஐந்தாயிரம் ரூபா போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் மேலும் இருவர் கைதாகினர்.

இவர்கள் வசம் இருந்து ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத் தாள்கள் 16, கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர்களை இன்று மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment