அதிவேக நெடுஞ்சாலைகளில் சாதாரண பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என கோரிக்கை

245 0
அதிவேக நெடுஞ்சாலைகளில் பேருந்து போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில், சாதாரண பேருந்துகளும் குறித்த வீதிகளில் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
எரிபொருட்களின் விலை வீழ்ச்சியால் மக்கள் சொந்த வாகனங்களில் பயணிக்கும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தனியார் பேருந்து போக்குவரத்து துறை வீழ்ச்சியடைவதற்கான ஏதுநிலைகள் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment