ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பில் விசாரணை

243 0
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கடந்த தினம் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளின் போது இரு மாணவ குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதல்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு, பல்கலைக்கழகத்தின் ஒழுக்காற்று குழு இன்று கூடவுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த மோதல் சம்பவத்தில் பலர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
சமய வழிபாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை, முகத்தை மூடியவாறு தடிகளுடன் அங்கு வந்தவர்களால் குழப்பநிலை ஏற்பட்டது.
இவ்வாறு வந்தவர்கள், மதவழிபாடுகளில் ஈடுபட்ட மாணவர்களை தாக்கியுள்ளனர்.
பின்னர் பல்கலைக்கழகத்தின் உபவேந்த உள்ளிட்டவர்கள் தலையிட்டு நிலமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
எவ்வாறாயினும் இன்று இடம்பெறவுள்ள ஒழுக்காற்று குழு விசரணையின் போது மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment