வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி மீது நடவடிக்கை எடுக்கப்படும் – மாவை சேனாதிராஜா

556 0

வடமாகாண மகளிர் அமைச்சர் அனந்தி சசிதரன் தமிழரசுக் கட்சியின் கொள்ளை மற்றும் நிலைப்பாடுகளுக்கெதிராகச் செயற்பட்டு வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிக் கூட்டம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போதே அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அனந்தி சசிதரன், சிவகரன் மற்றும் பேராசிரியர் சிற்றம்பலம் ஆகியோர் மீது நடவடிக்கையெடுக்கப்படும் எனத் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று காலை 10.00 மணியளவில் அண்மையில் வடமாகாணத்தில் இடம்பெற்ற குழப்பம் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இளைஞரணியைச் சேர்ந்த ஒருவரும் மாகாணசபை உறுப்பினர் ஒருவரும் அனந்தி சசிதரன் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரியதாகவும் அதற்கு கட்சித் தலைவர் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment