ஜனாதிபதியின் செயலாளராக தாம் நியமிக்கப்பட உள்ளாதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்றும் மூன்று தினங்களில் தாம் அந்த பதவிக்கு நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன் நேற்று பதவி விலகினார்.
தனிப்பட்ட காரணங்களின் அப்படையில் தாம் பதவி விலகுவதாக அவர் அறிவித்திருந்தார்.
இவர் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதியின் செயலாளராக பதவி ஏற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாண்டோ இவ்வாறு அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.