முச்சக்கர வண்டிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு காரணம் என்ன?

249 0

முச்சக்கர வண்டி போக்குவரத்து தொடர்பாக கட்டுப்பாட்டு அதிகார சபை ஒன்று இல்லாமை காரணமாகவே, அது தொடர்பான பிரச்சினைகள் எழுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டிச் சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை வரும் அமெரிக்காவின் பிரஜைகளுக்கு, கொழும்பு நகரின் முச்சக்கர வண்டிச் சாரதிகள் தொடர்பில் அமெரிக்க தூதரகத்தினால் எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அமெரிக்காவின் பெண்கள் தனித்து பயணிப்பதையும், இரவு நேரப் பயணத்தையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பயணங்களின்போது முச்சக்கர வண்டி பயன்பாடு என்பது தவிர்க்க முடியாததொன்றாகியுள்ளது.

முசச்க்கர வண்டி சாரதி பணிக்கான தகைமையை பூர்த்தி செய்த அல்லது அவர்களுக்கு பயிற்சியொன்றை வழங்கி அந்தப் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முச்சக்கர வண்டிச் சாரதிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment