புலம்பெயர் தமிழர்களுக்கு வட மாகாண ஆளுநர் அழைப்பு

313 0

புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு வந்து உதவிகளை வழங்க வேண்டும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அழைப்பு விடுத்துள்ளார்.

முல்லைத்தீவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க வேண்டும்.

இந்த நாட்டில் மத்திய அரசாங்கமும், மாகாண அரசாங்கமும் ஒன்றாக இருந்தால் பணியாற்ற முடியும்.

அவை இரண்டும் இரண்டு பக்கங்களுக்கு சென்றால் எதுவும் செய்ய முடியாது என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

Leave a comment