கனேடிய பிரஜைக்கு 300 ஏக்கர் காணியை வழங்கிய மகிந்த!

432 0

சீகிரிய பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றை நிர்மாணிக்க கனேடிய பிரஜை ஒருவருக்கு 300 ஏக்கர் காணி வழங்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த காணி சம்பந்தமாக ஏதாவது கூறவேண்டுமாக இருந்தாலும் தனது அலுவலகத்திற்கு வந்து தகவல்களை கூறலாம் என மாத்தளை மாவட்ட அரசாங்க அதிபர் டி.பீ.ஜி.குமாரசிறி தெரிவித்துள்ளார்.

மேலதிக அரசாங்க அதிபர் (காணி) இஸான் விஜயதிலக்க தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வழங்கிய உறுதிப்பத்திரத்தை கொண்டு குறித்த காணி சுற்றுலா ஹொட்டல் நிர்மாணிக்கவும் மிகப் பெரிய தோட்ட நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment