குளவி கொட்டியதில் மூவர் வைத்தியசாலையில்

304 0

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொப்கில் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகிய மூன்று பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

இன்று (30) காலை 9 மணியளவில் தேயிலை மலையில் கொழுந்து பரித்துகொண்டிருந்த போது, தேயிலை செடியினுள்ளிருந்த குளவிகூடு ஒன்று கலைந்து அதிலிருந்த குழவிகள் அங்கு தேயிலை பறித்துக்கொண்டிருந்தவர்களை கொட்டியதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகிய மூவர், கொட்டகலை வைத்தியசாலையில் சிக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment