சட்டவிரோதமாக கழிவுகளை இட்டுச்சென்ற 144 பேருக்கு வழக்கு

265 0

கடந்த 2 நாட்களுக்குள் மேல்மாகாணத்தில் அனுமதியற்ற வகையில் கழிவுகளை அகற்றிய 144 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் ராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு வடக்கு, மத்திய, தெற்கு உள்ளிட்ட பிரதேசங்களில் 27 பேரும், நுகேகொடை பிரதேசத்தில் 37 பேரும், கல்கிசை பிரதேசத்தில் 5 பேரும், கம்பஹா பிரதேசத்தில் 29 பேரும், களனி பிரதேசத்தில் 14 பேரும், நீர்கொழும்பு பிரதேசத்தில் 22 பேரும், களுத்துறையில் ஒருவரும், பாணந்துறையில் 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக அந்தந்த பிரதேசங்களைச் சேர்ந்த பொலிஸ் நிலையங்களின் ஊடாக வழக்கு தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் இவ்வாறான சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Leave a comment