சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ள FCID

347 0

சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள உதயங்க வீரதுங்கவை கைது செய்ய நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவு சர்வதேச பொலிஸாரின் (இன்டபோல்) ஒத்துழைப்பை நாடியுள்ளது.

மிக் விமான கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட பாரிய நிதி் மோசடி தொடர்பாக நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவுக்கு தேவையாகவுள்ள உதயங்க வீரதுங்க, விசாரணைகளுக்கு சமூகமளிக்காமல் இந்நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக இப்பிரிவு அறிவித்துள்ளது.

அவர் பதுங்கி இருக்கக்கூடுமென சந்தேகப்படும் இடங்களை பல தடவைகள் சர்வதேச பொலிஸார் பரிசீலித்தபோதும் அவர் அவ்விடங்களை விட்டு தப்பியோடியுள்ளதாகவும், வெளிநாட்டு கடவுச்சீட்டையும் மாற்றி இடத்துக்கிடம் மறைந்து திரிவதாகப் பொலிஸார் கூறியுள்ளனர். சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள உதயங்க தொடர்பான தகவல்கள் சிவப்பு அறிவிப்பு மூலம் பொலிஸாரால் பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a comment