சைட்டம் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் காத்திரமான தீர்மானமொன்றை முன்வைக்காததன் காரணமாக நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுவதென தீர்மானித்துள்ளது.
இந்த போராட்டத்துக்கு அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் பல ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித அலுத்கே நேற்று (29) அறிவித்துள்ளார்.
குறுகிய கால அறிவிப்பையடுத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இது எப்போது, ஆரம்பிக்கப்படும் என்பது தொடர்பான கால, நேரத்தை தீர்மானிக்கும் அதிகாரத்தை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழுவுக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கம் இது தொடர்பில் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கையைப் பொருத்து இன்றோ, நாளையோ அல்லது அடுத்த வாரமோ என்பது பற்றி உறுதியாக கூறமுடியாது என்பதாகவும் டாக்டர் ஹரித அலுத்கே மேலும் குறிப்பிட்டுள்ளார்.