மீன்கள் இறக்குமதி செய்வதைக் குறைத்து சர்வதேச சந்தைக்கு மீன்களை ஏற்றுமதி செய்யவேண்டும்

259 0
2020 ஆம் ஆண்டில் வெளிநாட்டிலிருந்து மீன்கள் இறக்குமதி செய்வதைக் குறைத்து சர்வதேச சந்தைக்கு மீன்களை ஏற்றுமதி செய்யவேண்டும் என கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 142 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிட்டில் மட்டக்களப்பு தர்மபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள செட்டை மீன்குஞ்சு உற்பத்தி நிலையம்  திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தினூடாக 4 ஆயிரத்துக்கும் அதிகமான தொழில் வாய்ப்புக்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்றொழில்துறைக்கு ஒதுக்கப்பட்ட 7 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதில் தொழிற்சாலைகளை நிர்மாணிப்பதன் ஊடாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கலாம் என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment