தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சித்து வரும் வீ.ஆனந்தசங்கரி

409 0
தமிழ் தேசிய கூட்டமைப்பு முறையாக செயற்பட்டிருந்தால், தற்போது பல்வேறு பிரச்சினைகளை தீர்த்திருக்க முடியும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுசெயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றைவெளியிட்டுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று அவர்களை ஏமாற்றும் ஒரு குழுவாகும்.
தேர்தல்காலத்தில் சர்வதேசத் தரப்பை முன்வைத்து தமிழ் மக்களிடம் தங்களுக்கு ஒன்றிணைந்து வாக்களிக்குமாறு கூட்டமைப்பினால் கோரப்படும்.
தேர்தல் நிறைவடைந்தப் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தங்களுக்கு ஏற்றாற்போல் பிளவடைந்து, தமிழ் மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கும், நாட்டுக்கும் சாபக்கேடாக மாறி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வீ.ஆனந்தசங்கரி தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சித்து வரும் நிலையில், அது குறித்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கருத்து வினவ முயற்சித்தப் போதும் அவர் பதிலளிக்கவில்லை.
எனினும் இவ்வாறான விமர்சனங்கள் குறித்து கூட்டமைப்பு கவனத்தில் கொள்வதில்லை என்றும், கூட்டமைப்பு மக்களுக்கான பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

Leave a comment