புகையிரத மிதி பலகையில் இருந்து கீழே விழுந்து மாணவர் ஒருவர் பலி

411 0

புகையிரத மிதி பலகையில் இருந்து கீழே விழுந்து பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் கிராண்பாஸ் – துடுகல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து வெயாங்கொட நோக்கி பயணித்த புகையிரதத்தில் மிதி பலகையில் பயணம் செய்த 15 மாணவன், சமிக்ஞை தூணில் மோதி கீழே விழுந்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவர், கொழும்பு தேசிய மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

இந்த மாணவர் வெயாங்கொட பிரதேசத்தை சேர்ந்தவருடன், கொழும்பு பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்று வந்துள்ளவர் என தெரியவந்துள்ளது.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

கிராண்பாஸ் காவற்துறை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Leave a comment