பிலியந்தலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் மேலும் 2 இருவர் கைது

265 0

பிலியந்தலை பிரதேசத்தில் காவற்துறை போதைப் பொருள் தடுப்புப் பிரிவிற்கு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் மேலும் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெஸ்பேவ மற்றும் பிலியந்தலை பிரதேசங்களில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மனித கொலையை மேற்கொள்வதற்காக சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் கீழ் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீரிஹான விசேட குற்ற தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு மீரிஹான காவற்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொள்வதற்கு பயன்படுத்தியுள்ள துப்பாக்கி, சிற்றூந்து மற்றும் பாரவூர்தி ஒன்றும் காவற்துறையினால் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் இன்று கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a comment