நாட்டுக்கு பதிய அரசியல் யாப்பே – ஐக்கிய தேசிய கட்சி

267 0

நாட்டுக்கு பதிய அரசியல் யாப்பே கொண்டு வரப்படும் என்று, ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்று ஊடக சந்திப்பில் வைத்து, பிரதி அமைச்சர் அஜித் பி பெரேர இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியல் யாப்பு புதிதாக தயாரிக்கப்பட்டு, கருத்துக் கணிப்பு
நடத்தப்படுவதற்கு சிறிலங்கா சுதந்திர கட்சியின் சில உறுப்பினர்கள்
எதிர்ப்பை வெளியிடுகின்றனர்.

ஆனால் கருத்துக் கணிப்பை நடத்தி புதிய அரசியல் யாப்பை தயாரிக்கவே அரசாங்கம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.

மாறாக தற்போதுள்ள யாப்பை திருத்தும் எண்ணம் இல்லை.

இந்த விடயத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சியையும் இணக்கப்பாட்டுக்கு
கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment