போலி நாணயத்தாள்களுடன் ஐந்து பேர் கைது

230 0

போலி நாணயத் தாள்களுடன் ஐவரை மதுகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, ஐந்தாயிரம் ரூபா போலி நாணயத்தாளைப் பயன்படுத்தி மதுபானத்தை கொள்வனவு செய்ய முற்பட்ட நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் 12 கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, மேற்கொள்ளபட்ட விசாரணைகளில் அவருக்கு அந்த நாணயத்தை வழங்கிய நால்வர் குறித்த தகவல் தெரியவந்தது.

இதற்கமைய, 127 போலி 5 ஆயிரம் ரூபாய் நாணயத் தாள்களுடன் மதுகம, குப்புக்கெடே மற்றும் வெரலபனாதர ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இன்று மதுகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment