இலங்கைத் தமிழர்கள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்ப பாதுகாப்பான சூழ்நிலை – மனோ கணேசன்

255 0
இலங்கைத் தமிழர்கள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்ப பாதுகாப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அமைச்சர், அந்த நாட்டின் ஊடகம் ஒன்றுக்கு இதனைக் கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் அரசியல் அந்தஸ்த்து கோரியிருந்த நிலையில் நாடுதிரும்பும் இலங்கை அகதிகள், சட்ட மீறல்களில் ஈடுபட்டிருந்தால் அது குறித்து விசாரணை நடத்தப்படும்.
ஆனால் முன்னரைப் போன்று அவர்கள் தற்போது துன்புறுத்தல் முகாம்களுக்கு கொண்டுச் செல்லப்பட மாட்டார்கள் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
எனினும் இதனை மறுத்துள்ள அவுஸ்திரேலியா தமிழ் காங்கிரஸ், இலங்கையில் தொடர்ந்தும் துன்புறுத்தல்கள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a comment